Thursday, 12 December 2013

ஸ்ரீவிஸ்வகர்மா

 
 ஸ்ரீ விஸ்வகர்மா

 
 
 
பிரகாசம் பொருந்திய ஜோதிமயமான
ஞானத்தையே தானாக கொண்டவரும்,
அண்டசராச்சரம் அனைத்திற்க்கும் காரணகர்த்தராயும்,
ஆதி இறைவனாகவும்,
யோகம் ஞானம் முதலிய பல ஆகம சாஸ்திரங்களை,
அறிவித்தவரும் பரமஸிவமும் குருவானவரும் சாட்சாத்
ஸ்ரீ விஸ்வகர்மாவாகும்
 (மூலஸ்தம்பம்)

ஸ்ரீவிஸ்வகர்மாவின் சகல வடிவ அலங்காரங்களையும்
நாராயண  தைத்ரீய சதுர்த்த  ப்ரவசனம்  ஆகிய 
 "கிருஷ்ண யஜுர்"  வேதத்தில் ஸ்தோத்திரமாக  துதிக்கப்படுகிறது.
இதுவே ஸ்ரீ விஸ்வகர்மாவின்
பூரண  சமஸ்த  இலட்சணமான  திருவடிவமாகும்

"விஸ்வபிரம்மம்' என்றும் "ஜகத்குரு" என்றும் போற்றப்படுகின்ற 
ஆதியாய்  இருக்கின்ற  ஸ்ரீ விராட் விஸ்வப்பிரம்மம்
ஐந்து முகங்களை கொண்டும் சடா மகுடங்களை உடைய அவருடைய,

ஸத்யோஜாதமுகம்,வெண் நிறமுடையது கிழக்கு முகம்.
வாமதேவ முகம் கருநீல நிறமுடையது தெற்கு முகம்
அஹோரம் முகம் சிகப்பு நிறம் கொண்டது மேற்கு முகம்
தத் புருஷம் முகம் மஞ்சள் நிறம் உடையது வடக்கு முகம்
ஈசான முகம் பச்சை நிறம் உடையது ஆகாய முகம்

சரீரம் பொன் நிறமானது, பத்து புஜங்களை உடையவரும்,
பிரகாசிக்கும் குண்டலங்களை காதில் தரித்தவரும்
பொன்னாலான பீதாம்பரத்தை
உத்திரீயமாய் உடையவரும்,
நாகங்களாகிய  யஞ்ஞோப வீதத்தைக்
கொண்டவரும், உருத்திராட்ச மாலையை ஆபரணமாய் பூண்டும்,
புலித்தோல் ஆடையை தரித்தும்,  ஒரு கரத்தில் அட்ச்ச மாலையும்,
ஒரு கரத்தில் தாமரையும்,  ஒரு கரத்தில்  நாகபாசமும்,  ஒரு கரத்தில்
சூலமும் ஒரு கரத்தில் பினாக வில்லும், ஒரு கரத்தில் மேரு வீணையும்,
ஒரு கரத்தில் பானமும், ஒரு கரத்தில் உடுக்கையும்,  இரண்டு கரங்களில்
சங்கு சக்கரமும் தாங்கியவரும், புகழும் படியான தோற்றமும்,
கோடி சூர்யர்கள் ஒருங்கே உதயமானது போல் பிரகாசிப்பவரும்,
எல்லா உயிர்களிடமும் கருணை கொண்டவரும், தேவர்கட்கும்,
மூவர்கட்கும் தேவனான, மஹா தேவனுமாகிய ஸ்ரீ விஸ்வகர்மப் ப்ரம்மம்,
ஜகத்குருவாகவும், நான்கு திசைகளையும், ஆகாயத்தையும்  நோக்கிய 
ஐந்து  முகங்களைக்  கொண்ட சர்வ  வியாபகருமாகிய
ஸ்ரீ விஸ்வகர்மாவைத் துதிக்கின்றோம் என்பதாகும்.

விஸ்வபிரம்மம்' ஜகத்குரு ஸ்ரீ விஸ்வகர்மா என வேத
இதிகாச புராணங்களில் போற்றப்படுகின்ற 
ஸ்ரீ "விஸ்வபிரம்மம்'   லோகங்களைப் படைத்தபின்
அதை பரிபாலிக்கின்ற விதமாக முதலில் தன் மானச சிருஷ்டியால்
சுயம்புவாய்  தோன்றியவர்கள் ஐந்து விஸ்வகர்ம ரிஷிகள்,
பின் அவர்களின்  தோன்றல்கள் வழி வழியாக விஸ்வகுலம்,
பல விருட்சமாகி விரிந்து பரந்து உள்ளது.

ஸ்ரீ விஸ்வகர்மாவின்,
வெண்ணிற சத்யோஜாதகம் கிழக்கு முகதியானத்தால்
உருத்திர ரூபமுடைய சானக ரிஷி பின் மனு தோன்றி
ரிக் வேதத்தால் பூஜிக்கப்பட்டார்

கரு நீலநிற வாம தேவமுகம் தெற்கு முக தியானத்தால்
விஷ்ணு ரூபமுடைய சனாதனரிஷி பின் மயா தோன்றி
யஜுர்வேதத்தால் பூஜிக்கப்பட்டார்.

சிகப்பு நிற அகோரம் மேற்கு முக தியானத்தால்
பிரம்ம ரூபமுடைய அபுவனஸரிஷி பின் துவஷ்டா தோன்றி
சாமவேதத்தால் பூஜிக்கப்பட்டார்.

மஞ்சள் நிற தத் புருஷம் வடக்கு முக தியானத்தால்
இந்திர ரூபமுடைய பிரத்தனஸரிஷி பின் ஸில்பி தோன்றி
அதர்வண வேதத்தால் பூஜிக்கப்பட்டார்.

பச்சைநிற ஈசானம் ஆகாய முக தியானத்தால்
ஸூர்ய ரூபமுடைய சுபர்ணரிஷி பின்விஸ்வக்ஞ தோன்றி
பிரணவ வேதத்தால் பூஜிக்கப்பட்டார்.

(இதை யஜுர் வேத எக்ஞ் மந்திரத்தில் கூறப்பட்டுள்ளது)



"ஜாதம் பஞ்சப்ரம்ம  குலம்  ஸ்ந்ததெள  விஸ்வகர்மண
நித்திய கர்மாஷ்டகயுதம் கர்ம சோடச நிஷ்டிதம்  
மனு மயா ஸ்ததா த்வஷ்டா ஸில்பி விஸ்வக்ஞ்யித்யபி
விஸ்வகர்ம சுதாஹ்தே பஞ்சஸ்ருட்டி ப்ரவர்ததக."

என்று ஸ்காந்தம் நாகர காண்டத்தில் ஸ்ரீ விஸ்வகர்மாவின்
புத்திரராக ஜனித்த மனு, மய, த்வஷ்டா, ஸில்பி விஸ்வக்ஞ,
எனும் விஸ்வகுல சந்ததியர்களே,
உலகச் சேமங்களைக் கருதி பஞ்சகிர்த்திய தொழில்களைப் புரிந்து ஜகத்,
ஜீவ  சிருஸ்டிகளை  ஒருங்கே கொண்டு 
ஸ்ரீ விஸ்வப்ப்ரம்ம சந்ததியரேனவும்   போற்றத்தக்க  
விஸ்வகர்ம பிராமணர்கள் என வேத சம்மதமாக   
அழைக்கப்பெற்றனர்.இதுவே இப் பூவுலகில் ஐந் தொழிலைத்
தமது உரிமையாகக், உடமையாகக் கொண்டு தொழில் நடத்தி வாழ்ந்து
வரும் விஸ்வகுலத்தவரின்  வரலாறு ஆகும்.

 

No comments:

Post a Comment